ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்ப்புகைத்தாக்குதல்.

உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேலைக்காக சென்றிருந்த இலட்சக்கணக்கானோர் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி ய வண்ணம் உள்ளனர். மேலும் வேலைவாய்ப்பினை இழந்துகொண்டோர் தாங்கள் பணியாற்றும் நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதனை அவதானிக்ககூடியதாகவுள்ளது. இதனுடைய ஒரு பிரதிபலிப்பாக ஜோர்தானில் வேலை வாய்ப்பை இழந்த இலங்கையர் குழுவினரால் ஏற்பட்டுக் கொண்ட பதட்டமான நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் இலங்கையர் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில்பேட்டை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர்களினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதி பொலிசாரினால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா அப்பகுதியில் பணியாற்றி இருந்த இந்ததொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக தங்களுடைய வேலைவாய்ப்பினை இழந்திருந்த நிலையில் அவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிய வந்ததை அடுத்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேற்றைய தினம் அதாவது [27 ஆம் திகதி ] தொழில்பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு விசாரணை செய்வதற்காக விஜயம் செய்துள்ளனர். இதன்போது போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற  முறையில் நடந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்றதான தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்களினுடைய போராட்டங்கள் அண்மைய காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *