கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குண்டு வெடிப்புகள் காரணமாக மக்களை விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்களையோ அல்லது நபர்களையோ கண்டால் உடனடியாக அருகிலிருக்கும் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மக்களைக் கேட்டுள்ளார்.
குண்டுத் தாக்குதல்களை தடுத்துக்கொள்ளும் முகமாக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேநேரம், படையினர் கிளிநொச்சியை கைப்பற்றியதை அடுத்து, விடுதலைப்புலிகள் நடத்தக்கூடிய எதிர்பாராத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் பொலிஸார் விஷேட திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்திருக்கிறார்.