அமெரிக்க, கொரிய நிதியுதவியுடன் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் பயிற்சி – அமைச்சர் பியசேன கமகே

potty-training.jpgஅமெரிக்க, கொரிய நிதியுதவியுடன் அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் பேருக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்க தொழிற் பயிற்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார். இதன்போது வடக்கு, கிழக்கு மீட்கப்பட்ட பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமையளிப்பதுடன் புலி சந்தேக நபர்களென தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இவ்வாறு அம்பேபுஸ்ஸ, பல்லேகல, பூசா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான நிதியுதவிகளை அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவல், ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு திறனபிவிருந்தி, தொழிற் பயிற்சி அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :- வேலைவாய்ப்பில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வாழ்க் கைத்தொழிற் பயிற்சி அமைச்சு நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதன் பயனாக இவ்வருடம் 60,000 பேருக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளன. அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் பேருக்குத் தொழிற் பயிற்சி வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைச்சு தொழிற் பயிற்சிகளை வழங்குவதுடன் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெறும் வகையிலான சான்றிதழ்களையும் பயிற்சியின் முடிவில் வழங்கி வருகின்றது.

தொழிற் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களில் தற்போது டிப்ளோமா சான்றி தழுக்கான பயிற்சிகள் இடம்பெறுகின்றன. உயர் டிப்ளோமா மற்றும் பட்டதாரி பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் வகையில் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமொன்றைத் திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் உட்பட சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையங்களைப் புனரமைக்க அமெரிக்கா உட்பட பல நாடுகள் 1125 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *