பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதலை நிறுத்தவும்

jet-1301.jpgவன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதலை நிறுத்துமாறு யாழ. மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்

இதுபற்றி அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளதாவது விமாமனத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களினால் மக்கள் நாளாந்தும் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர். வன்னியில் பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையிலான ஏ35 வீதியை அண்டிய பகுதிகள் மற்றும் தருமபுரம் புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரின் ஷெல் தாக்கதல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்புத் தேடி எங்கு செல்வது என்று தெரியாது தவிக்கின்றனர் நாம் மக்களை தேவாலையங்களில் ஒன்று கூடுமாறு அழைக்கலாம் அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர் தற்போது உள்ள நிலயில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக அமையலாம். எனவே பொது மக்களின் பகுதிகளில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்தவேண்டும்

இவ்வாறு ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரட்ணசிறி விக்கிமநாயக்கää பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ,  மற்றும வவுனயா மாவட்ட இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர் பிரித்தானியத் தூதுவர் ஆகியோர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *