வவுனியா ஆஸ்பத்திரியில் 37 புலிகளின் உடல்கள்

வவுனியா பொது வைத்தியசாலையில் விடுதலைப் புலிகளின் 37 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் இந்த 37 உடல்களும் படையினரால் கொண்டுவரப்பட்டு வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வன்னிப் போர் முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களே இவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில் இந்த உடல்களை பொறுப்பேற்று விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உடல்கள் எப்போது வன்னிக்குக் கொண்டு செல்லப்படுமெனத் தெரியவில்லையெனவும் கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *