ஈரான் விவகாரத்தில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க ஒபாமா திட்டம்

obama.jpgஈரான் விவகாரம் தொடர்பாக தனது தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்கா புதிய அணுகுமுறையைக் கையாளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தொலைக்காட்சி நேர்காணலில் ஒபாமா மேலும் தெரிவிக்கையில்;

எமது சவால்களுக்குள் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக ஈரான் விவகாரம் உள்ளது. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டமும் லெபனானின் சியா கட்சி ஹிஸ்புல்லா அமைப்புக்கான ஈரான் ஆதரவு வழங்குவதும் கவலை தருவதாக உள்ளது. மேலும், மத்திய கிழக்கின் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விசேட குழு ஒன்றை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாக காலத்தில் குற்றமிழைத்த அதிகாரிகளை நான் நிராகரிக்கப்போவதில்லை. நான் பதவியேற்று நூறு நாட்களுக்குள் முடியாவிடினும் எப்படியாவது குவான்டனமோ சிறைச்சாலையை மூடுவது உறுதி. புஷ் நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *