தொடரும் சென்னை சூப்பர்கிங்ஸின் தோல்விகள் – பட்லரின் அதிரடியுடன் வென்றது ராஜஸ்தான் !

ஐ.பி.எல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற  வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ஓட்டங்களில்  வெளியேறினார். அடுத்து வந்த வாட்சன் 3 பந்தில் 8 ஓட்டங்களில் எடுத்த நிலையில் வெளியேறினார்.
25 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஓட்டத்தை  உயர்த்த முற்பட்டனர்.  ஆனால்,  ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஓட்டத்தை உயர்த்தமுடியவில்லை.
19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ஓட்டங்களிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ஓட்டங்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.  இதனால், 20 பந்துப்பரிமாற்றங்கள்   முடிவில் 5 இலக்குகளை  இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 126 ஓட்டங்ககள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் முக்கிய இலக்குகளை இழந்த ராஜஸ்தான், அதன் பின் நிதானமாக ஆடியது. ஜோஸ் பட்லரும், ஸ்மித்தும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், 17.3 பந்துப்பறிமாற்றங்களில்  3 இலக்குகளை இழந்து  126 ஓட்டங்களை  எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  பட்லர் 70 ஓட்டங்களும், ஸ்மித் 26 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். மேலும் இந்த வெற்றியுடன் 08 புள்ளிகளை பெற்ற ராஜஸ்தான் ரோஜல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *