கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையினை மேலும் விஸ்தரிக்கும் வகையில் 26 பஸ்களை அரசாங்கம் வழங்கியுள்ளன. திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மிகவும் மோசமான நிலையில் பின்தங்கிக் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்துச் சேவை தற்போது விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையினைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே புதிய பஸ்கள் வழங்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்.கே.ஏ.டபிள்யூ. குணவர்தன தெரிவித்துள்ளார்.