ஈழப் பிரச்சனையில் ஆதாயம் தேடும் இயக்கங்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல், அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர் என்று மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ராஜீவ்காந்தி சிலையை வன்முறையாளர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள் மற்றும் தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மத்திய, மாநில அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல் அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர். இது தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் சாதனைகள் மூலம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *