தென்கிழக்கு நாடான மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அந்நாட்டின் அரசு தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாலையில் இறங்கி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.
யான்கூன், மண்டேலே உள்ளிட்ட நகரங்களில் தீவிரமாக போர் நடந்தது. இதில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
மியன்மாரில் இடம்பெற்றுவரும் இந்தக்கொடூர இராணுவ ஆட்சிக்கு எதிராக உலகின் பல நாட்டுத்தலைவர்களும் கண்டனங்களை வெளியிட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.