யாழ். மாவட்டத்திற்கான அவசரகால வைத்தியசேவை நிலையமொன்று இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையம் யாழ்ப்பாணம் பண்ணை, சுகாதாரக் கிராமத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் திறந்து வைப்பார். இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், சர்வதேச மருத்துவ கழக வதிவிடப் பணிப்பாளர் டொனி வூட்யாட் ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.
இந்நிலையத்தை அமைப்பதற்கும், சகல வைத்திய உபகரணங்கள், வாகனங்களை ஐ.நா.திட்டப் பிரிவு, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச மருத்துவக் கழகம் ஆகியன வழங்கியுள்ளன.
இந்நிலைய திறப்பு விழாவுக்கு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமைதாங்குவார்.