இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் திகதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார்.
விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் அவர் எல்லாவகையான கிரிக்கெட்டில் இருந்தும் கொஞ்ச காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார்.