பாய மறுத்த 142 கோடி பெறுமதியான குதிரை – தகர்ந்தது இலங்கையின் பதக்கக்கனவு !

இலங்கை சார்பில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை கார்ல்ஸன் பெற்றிருந்தார்.

ஒலிம்பிக் வீராங்கனை மெடில்டா கார்ல்ஸன் தோல்வி

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை பெற தவறியிருந்தனர்.

தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை பெற தவறியிருந்தனர்.

இந்த நிலையில், இறுதியாக மெதில்டா கார்ல்ஸன் மீது இலங்கை ஒலிம்பிக் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

எனினும், குதிரையேற்ற போட்டியில் கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே தோல்வியை வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்ததுடன், இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து போனது.

இலங்கை சார்பாக பங்கேற்ற மடில்டா கார்ல்சனின் குதிரை பாய மறுத்ததால் அவர் தோல்வியுற்று வெளியேறினார்.

கார்ல்சனின் உத்தரவின்படி ஆரம்பத்தில் பாய்ந்த குதிரை, எட்டாவது தடை தாண்டலின் போது குதிரை பாய மறுத்தது. இதனால் கார்ல்சன் தோல்வியைத் தழுவிக்கொண்டு களத்திலிருந்து வெளியேறினார்.

142 கோடி பெறுமதியான குதிரையுடன் களத்தில் குதித்திருந்த மெடில்டாகார்ல்ஸன் வெற்றி பெறுவதற்காகவே தான் வந்துள்ளதாக ஊடகங்களிடம் கூறியிருந்த நிலையில் இவர்ருடைய குதிரை மீதான பெறுமதி பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *