இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் ஓட்டமெதுவுமின்றி வெளியேறினர். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ராபின்சன், சாம் கரன், தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து முதலாவது இனிங்சில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 06 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.