“டெல்லியை அழிக்க 5 நிமிடம் போதும்.” – பாகிஸ்தான் அணுகுண்டு தந்தையின் உயிரை காவுவாங்கிய கொரோனா !

பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டவர் அப்துல் காதிர்கான். இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, எதிலும் இந்தியாவுடன் போட்டி போடும் பாகிஸ்தானும் அணுகுண்டு உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அப்போது, பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கியதால், அந்நாட்டினர் இவரை பெருமையுடன் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைத்து வந்தனர்.

85 வயதான அப்துல் காதிர்கான் சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, உயிருக்கு போராடினார். இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் அப்துல் காதிர்.
இவரது மறைவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் அப்துல் காதிர் கான் அளித்த பேட்டியில், ராவல் பிண்டி நகலிருந்து வெறும் 5 நிமிடங்களில் டெல்லி தாக்கி அழிக்க முடியும் அதற்கான வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *