கொமன்வேல்த் போட்டிகளுக்காக பிரித்தானியாவுக்கு சென்ற மேலும் ஏழு இலங்கை வீரர்கள் மாயம் !

பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறச் சென்ற இலங்கையர்கள் மாயமாவது அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இதுவரை 10 இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

9 விளையாட்டு வீரர்களும், முகாமையாளருமே இவ்வாறு மாயமாகியுள்ளனர். கடந்த வாரம் மூவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது மேலும் 7 பேர் பிரித்தானியாவில் தங்கி தொழில் புரியும் நோக்கத்தில் மாயமாகியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னர் மாயமாகி இருந்த பயிற்றுவிப்பாளரும் இலங்கை அணி வீரரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பர்மிங்ஹாம் காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *