மேல் மாகாணத்தில் மீண்டும் பொலிஸ் பதிவு ! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

ranjeth-gunasekara.jpgகடந்த ஐந்து வருடத்துக்குள் மேல் மாகாணத்தில் வந்து குடியேறியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சனி,ஞாயிறு (21,22,)  ஆகிய தினங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர்  மேலும் கூறியதாவது,

வடக்கில் தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் தெற்கில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மீலாத் விழாவின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பாணியில் மேலும் பல தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்குத் தேவை. எனவே பொது மக்கள் எப்போதும் விழ்ப்புடன் இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் குடியேறியவர்களும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தம்மைப் பதிவு செய்து கௌள வேண்டும். மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் வேறு பொது நிலையங்களிலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேறn;காண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *