மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது மக்களுக்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *