யாழ்தேவி ரயில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். யாழ் தேவி ரயில் பாதை அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதற்காக கொழும்பு பல்கலைக்கழக மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ். ரயில் பாதையை அமைக்கும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற பொது மக்களின் நிதி உதவியும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
ஒருபோதும் நிறைவேற்ற முடியாது எனக்கூறப்பட்ட திட்டங்களை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.
MANITHA NEYAN
THE RESON WHY SO LITTLE IS DONE IS GENERALLY BECAUSE SO LITTLE IS ATTEMPTED