அவசரகாலச் சட்டம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

srilanka-parliament.jpgநாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க  பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்; இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது. ஐ.தே.க.வும் முஸ்லிம் காங்கிரஸ{ம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *