விடுதலைப்புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து: உளவுத்துறை

sonia-gandhi.jpgவிடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அவர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி, அவரது மகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கும் விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக வரும்போது, அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • aasa
    aasa

    நடந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. செய்வதற்கு முன்னால், எங்களுக்கு அப்படிப்பட்ட நோக்கமெ இல்லை, இது எங்களை கேவலப்படுத்த முயற்சி என்று அறிக்கைகளை பார்க்கலாம். செய்த பின்னால், நாங்கள் செய்யவே இல்லை. துப்பு துலக்க நாங்கள் உதவ விரும்புகிறோம் என்றும் அறிக்கைகளை பார்க்கலாம். இவர்கள்தான் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்ட பின்னால், துன்பியல் நிகழ்வு என்று அறிக்கையையும் பார்க்க்லாம்.

    Reply