வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

“ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும்” – ஐ.நா வலியுறுத்தல் !

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மார் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

“2வது உலகப் போரில் பங்கேற்ற கப்டன் சேர்  டொம் மூர் காலமானார் !

2வது உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த  கப்டன் சேர்  டொம் மூர் (Tom Moore), உடல்நலக் குறைவால் தனது 100 ஆவது வயதில்  நேற்று(03.02.2021) காலமானார்.

இவர் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டு 53 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக திரட்டி சாதனை படைத்தார்.

இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டொம்  மூர், கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி  கொரோனாத் தொற்றினால்  பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உடல்நிலை மேலும் மோசமாகிய நிலையில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அவரது குடும்பத்திற்கு பிரித்தானியாவின் ராணி எலிசபெத், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இரங்கல் செய்தியில், “டொம் மூர் ஒரு ஹீரோ. உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை !

ரஷ்ய ஜனாதிபதி புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி.

ஆனால், புடின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா திரும்பிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா  முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு !

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஆங் சான் சூகி மீது இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வரும் 15-ஆம் திகதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாக அதிபா் வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆங் சான் சூகியின் இல்லத்தில் சோதனை நடத்திய இராணுவக் குழு, அங்கிருந்து 10 ‘வாக்கி டாக்கி’ கருவிகளையும், வேறு சில தகவல் தொடா்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சாதனங்களை உரிய அனுமதியின்றி ஆங் சாங் சூகி இறக்குமதி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி முறைகேடு வழக்கில் இதனை ஆதாரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் ” – இந்திய பொலிஸாரின் வழக்கு பதிவுக்கு கிரேட்டா தன்பெர்க் பதிலடி !

இந்திய அரசு அமுல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அடுக்கு தடைகளை டெல்லி போலீசார் ஏற்படுத்ததியுள்ளனர். பேரிகார்கடுகளை வரிசையான வைத்து சாலைகளில் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். மேலும், இணையதள சேவையை முடக்கியுள்ளனர். மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளையும் துண்டித்துள்ளனர்.
அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை கேள்விகளால் துளைத்த சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவான டுவீட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில்

“புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் – இன்னும் வேகமாக பரவும் அபாயம்” – இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு  இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதற்கிடையே 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரசின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவியது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் உருமாறி பரவியது.

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் உருமாறிய கொரோனாவால் ஐரோப்பா உள்பட சில நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்து மேலும் வலுவடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் அதிதீவிரமாக பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் அடைந்து தெற்கு இங்கிலாந்து பகுதி ஒன்றில் கண்டறியப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதுவரை இந்த வைரஸ் குறைவானவர்களுக்கே பரவி உள்ளது என்றும் வரும் நாட்களில் தான் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘மீண்டும் உருமாறியுள்ள புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பலன் தருமா? என்பது சந்தேகம். இந்த புதிய வகை கொரோனாவை தடுக்க மற்றொரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்’ என்றனர்.

மியன்மாரில் இராணுவப்புரட்சியின் எதிரொலி – பொருளாதார தடை விதிக்க நேரிடும் – ஜோபைடன் எச்சரிக்கை !

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மியன்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது:-

மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்.  நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இது.

மேலும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதார அபராதங்களை உயர்த்துவதற்கான 2016-ம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்.

இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல் !

இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது.  இதனால்,  பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது.  இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.
தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன.  இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன என கூறியுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் காந்தி சிலை உடைப்பு – அமெரிக்கா கண்டனம் !

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். சிலையில் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகள் உடைக்கப்பட்டு இருந்தன.

காந்தி சிலை உடைப்பு குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது:-

காந்தியின் நினைவுச் சின்னங்கள் இழிவுப்படுத்துவது குறித்து நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம். இந்த செயலை கண்டிக்கிறோம். இது தொடர்பாக விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

டேவிஸ் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து அழிப்பு உள்ளிடக்கிய எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்கள் சமூகம் பலவிதமான பார்வைகள் மற்றும் மதிப்புகளை பிரதிபலிக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட மத்திய பூங்காவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கண்டன கூட்டம் நடத்தினர்.

மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் !

மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

“இராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சான் சூசி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தலைவர்களை விடுவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூசியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

S'poreans in Myanmar advised to remain vigilant amid military coup: MFA -  Mothership.SG - News from Singapore, Asia and around the world

இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ ஆட்சி வரலாறு:

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூசி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது.

அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூசி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆங் சான் சூசிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.