கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் நீர்வெட்டு – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் நாளை இரவு 9.00 மணி வரையான 36 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கலட்டுவாவிலிருந்து தெஹிவளை நீர்த் தேக்கம் வரை நீர் விநியோகம் செய்யும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி தெஹிவளை-கல்கிஸ்ஸ மாநகர சபை எல்லை,  சொய்சாபுர, மொரட்டுவை, வெள்ளவத்தை,  பாமன்கடை, கிருலப்பனை, ஹெவலொக்டவுன்,  கொஹவல, மாளிகாகொடல்ல,  கிம்புடான,  முல்லேரியாவ,  ஐ.டி.எச்.,  அங்கொடை, முல்லேரியா ஆஸ்பத்திரி, பன்னிபிட்டிய, ஹோமாகம,  ருக்மல்கம,  மத்தேகொட,பெலவத்த மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் நீர்வெட்டினால் பாதிக்கப்படும் என்றும் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *