21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு

மஸ்கெலியா நகர் வர்த்தகர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.எஸ். பத்திரனவின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மஸ்கெலியா பீ.எம்.டி. கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பொறுப்பதிகாரி சி.எஸ்.பத்திரன அங்கு உரையாற்றுகையில்;

பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், சிறுவர்கள் மத்தியிலும், தற்போது பான்பராக், என்சி மேலும் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பாடசாலை அதிபர்களினால் ஜனாதிபதிக்கு புகார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது சம்பந்தமாக இந்நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. ஆகையால் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்றும் சிறுவர்களிடம் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை விற்பனை செய்து எதிர்கால சந்ததியை அழித் தொழிக்க வேண்டாம் என சகல வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் பான்பராக், என்சி போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவ்வாறு விற்பனை செய்வோரை இனம்கண்டு உடன் தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *