வவுனியா, நெலுங்குளம் பிரதேசத்திலிருந்து 16 கிலோ எடையுள்ள நான்கு தற்கொலை அங்கிகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்று தெரிவித்தார்.
அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட நிலையிலேயே நான்கு தற்கொலை அங்கிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்தே நெலுங்குளம் பொதுமயானத்திற்கு அருகிலிருந்து இத் தற்கொலை அங்கிகளையும் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினர்.