ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கை உருவாக்கப்படும்! மஹிந்த சிந்தனை 2 வெளியீட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை 2 இன்று முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்தினார்.

ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கையை விளங்கச் செய்யும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கியதாக மஹிந்த சிந்தனை 2 வகுக்கப்பட்டுள்ளது.

உணவில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றியமைத்தல்

சட்டம்,  ஒழுக்கம் மற்றும் நேர்மையுள்ள சமூகத்தை உருவாக்கல்

அனைவருக்கும் வசிப்பிடம்,  குடிநீர்,  மின்சாரம் மற்றும் தொடர்புசாதன வசதிகள் கொண்ட நாடாக மாற்றியமைத்தல்

முன்னேற்றம் காணப்பட்ட வகையிலான நெடுஞ்சலைகளுடன் அனைவருக்குமான போக்கு வரத்து வசதியுள்ள நாடாக உருவாக்கல்

வெற்றிகொண்ட நாட்டை மீண்டும் பிரிய விடாமல் ஒரே நாடாக கட்டிக் காப்பது

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல்

காடுகளையும் விலங்கினங்களையும் சுற்றாடலையும் பாதுகாக்கப்பட்ட இலங்கையை உருவாக்கல்

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முதலிடம் வழங்குதல்
போன்றவை உட்பட பல முக்கிய வடயங்கள் மஹிந்த சிந்தனை 2இல்உள்ளடக்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *