அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் – பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவிப்பு

rathnasiri_wicremanayake.jpgஅரச சார்பற்ற உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மேற்கொள்ளப்படவேண்டிய சட்டத் திருத்தங்களை முன்மொழிவதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு அதன் சிபாரிசுகளை ஏற்கனவே கையளித்துள்ளது. அது குறித்து விரைவில் கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவுமே இவ்வாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மேலும் கூறினார். இதேவேளை குறிப்பிட்ட சிபாரிசுகள் சட்ட மாஅதிபருக்கு அவரது ஆலோசனையை பொறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *