வடக்கில் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக அமைதியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக வன்னிப்பகுதிகளில் மீள்குடியேற்றபட்ட மக்கள் அமைதியான முறையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.
போர் நடவடிக்கைகளின் போது தங்கள் உறவுகளை இழந்தவர்கள் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவில்லை. வன்னியிலுள்ள புடவைக் கடைகளில் தீபாவளி வியாபாரம் இம்முறை களைகட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.