போரின் போது சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிப் பேராளிகளிகளின் புனர்வாழ்வுக்கென ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் 40 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புனர்வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கல்வி, தகவல் தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பயிற்சியளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.