தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் தெற்கு, வடக்கு. கரம்பகம், தனங்கிளப்பு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளதால் தங்களை விரைவில் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட இப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற பாதுகாப்புத்தரப்பினர் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.