கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதிதாக பாடசாலை அமைக்கக் கோரிக்கை

கிளிநொச்சி, மலையாளபுரம், பொன்னகர், பாரதிபுரம் கிராமங்களிற்கென தனியான பாடசாலையொன்றை விரைவில் அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதிகளிற்கென தற்போது பாரதிபுர வித்தியாலயமே இயங்கி வருகின்றது. எனினும் தற்போது இந்தப்பாடசாலையில் மாணவர்கள் தொகை அதிகரித்துள்ளதனால் பல மாணவர்கள் நகரை அண்டியுள்ள பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.முற்றாக போக்குவரத்து வசதிகள் இல்லாத இந்தப் பகுதியிலிருந்து மாணவர்கள் வெளியில் செல்வதனால் பல்வேறு இடர்களையும் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான மாணவர்கள் நடந்தே பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.எனவே தற்போதைய சூழலில் இது மிகவும் கஷ்டமாயிருப்பதாக மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குஞ்சுக்குளம் பகுதியில் மக்கள் இன்மையால் அந்தப் பகுதியில் இயங்கி வந்த பாடசாலையை மலையாளபுரம் பகுதியில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் சில தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. அதனையாவது உரிய முறையில் முன்னெடுத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் சுமுகமான கல்விச் செயற்பாட்டிலும் உரியவர்கள் கூடிய கவனமெடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *