பாதை அகலிப்பினால் சாவகச்சேரியில் பல கட்டடங்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Chavakacheriஏ-9 பிரதான வீதி அகலிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரியிலுள்ள பல கட்டங்களுக்கு ஆபத்து எற்பட்டுள்ளது. பாதை அகலிப்புக்காக சுமார் 50 வரையிலான கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வீதி அகலிப்புக்கென எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளதன்படி வீதியின் மேற்கிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ பகுதியாகவோ உடைக்கப்பட வேண்டிய நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மூன்று வங்ககிக் கட்டங்களும் அமைந்துள்ளன. அத்துடன் பல குடிமனைகளும் அரச கட்டங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *