கிளிநொச்சி வீடமைப்புத் திட்டங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள்.

Rebuilding_Buildingsகிளிநொச்சி மாவட்டத்தில் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தேன்றியுள்ளது. இதனால் வீட்டுத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்
மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வீடமைப்பிற்காக கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வரும் பணம் சீரான முறையில் வழங்கப்படாமை, மேசன் வேலை, தச்சு வேலைகளுக்கான தொழிலாளர்கள் தட்டுப்பாடு, மணல் உட்பட்ட மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமம் போன்றவற்றின் காரணமாக இந்நிலை தேன்றியுள்ளது. தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் உரிய காலத்தில் இவ்வீடமைப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட மக்கள்
பாதிப்படைந்து ள்ளனர். இதேவேளை, சேதமுற்ற வீடுகளைத் திருத்தியமைக்கும் பணிகளும் அதில் தொடர்புபட்ட நிறுவனங்கள்,  அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளால் இழுபடும் நிலையும் தோன்றியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *