ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார்.

றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *