நேற்று செவ்வாய் கிழமை காலை பிரார்த்தனை நிகழ்வு முடிவுற்றதும் பாடசாலையில் வைத்தே நான்கு மாணவிகள் நஞ்சருந்தியுள்ளனர். இம்மாணவிகள் உடனடியாக சங்கத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டனர்.
இம்மாணவிகள் பாடசாலைச் சுவரில் பெயர்களை வெட்டியதற்காக அதிபர் இம்மாணவிகளை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முன்னிலையில் கண்டித்தாகத் தெரியவருகிறது. அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமலேயே இம்மாணவிகள் குடிபானம் ஒன்றில் எதனையோ கலந்து அருந்தி உள்ளனர்.
வலிகாமம் பகுதியில் வடலி அடைப்பில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இம்மாணவிகள் அங்கு ஓஎல் படிக்கின்றனர் எனத் தெரியவருகிறது.