இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது காலி தேர்தல் மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
தேசிய மக்கள் சக்தி – 29,963
ஐக்கிய தேசிய கட்சி – 18,968
ஏற்கனவே மாத்தறை மாவட்டத்தில் அமோக வெற்றியை பதிவு செய்திருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இங்கும் அபார வெற்றி பெற்றுள்ளது.