இலங் கையிலுள்ள சிறைச்சாலைகளில் 32 ஆயிரத்து 555 கைதிகளில் 4,381 பேர் ஒரு நாளாவது பாடசாலை செல்லாதவர்களாக இருப்பதுடன் 750 பேர் உயர் கல்வி பெற்றவர்களாகவும் அதில் 21 பேர் பட்டதாரிகள் என்றும் தெரியவருகிறது. சிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வெலிக்கடை, போகம்பறை , மஹர, முதலான பிரதான சிறைச்சாலைகள் உட்பட ஏனைய அனைத்து சிறைச்சாலைகளுமாக 27 நிறுவனங்களில் 32,555 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 1,014 பேர் பெண்களாவர். இவர்களில் 520 பேர் போதைப் பொருள், தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களாவர். அதிலும் இரு பெண்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.