இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த 13 தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் கைது !

கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் குடிவரவு, குடியகல்வு விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகொட பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இகசிய தகவலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (2608.2020) மாலை 6.30 மணி அளவில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த 13 தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 10,300 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 9 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *