தைப்பொங்கல் பண்டிகையையொட்டி ‘பிரஜா சக்தி’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ‘அரச பொங்கல் விழா’ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 10.00 மணிக்கு கண்டி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், மாகாண அமைச்சர்கள் பலரும் இப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. அமைச்சர் தொண்டமானால் வழி நடத்தப்படும் ‘பிரஜா சக்தி’ அமைப்பு இவ்விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் மலையகத்தின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் இப்பொங்கல் விழாவில் இடம் பெறவுள்ளன.
chandran.raja
போர்என்றால் போர்! சமாதானமென்றால் சமாதானம்!! என்ற இனவெறிகருத்தை ஒரு ஜனாதிபதி சொல்லிய காலம் மலையேறி மூவினமக்களுக்கும் இலங்கையுரியது. ஐக்கியஇலங்கையே அதற்கான தீர்வு.மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அதற்கானவழி என்பதை நிரூபித்து வருகிறார் மகிந்தா ராஜயபக்சா அதற்காக அவரை வாழ்த்தி யுத்தமில்லாத இலங்கைக்காக நாம் காத்திருப்போம்.