“பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி” – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய சரத் பொன்சேகா,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு குடும்பமும் பயங்கரவாதிகள். பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின்கட்டளை அதிகாரி எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாலச்சந்திரன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், காற்சட்டை மற்றும் சட்டையை அணிவித்து ஒழுங்கப்படுத்தப்பட்டிருப்பார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *