“20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது” – அகிலவிராஜ் காரியவசம்

புதிய 20ஆவது அரசியலமைப்புச்சட்டமூலத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்ககைகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் ஐக்கியமக்கள் சக்தி எல்லாவகையிலும் அதனை எதிர்ப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 20ஆவது திருத்தத்தின் மீதான தன்னுடைய அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சியும் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இது பற்றி குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் “20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

சமயத் தலைவர்களும் கூட தங்களது நிலைப்பாட்டை 20ஆம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக  தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறான நிலையில், 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது என்று அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *