பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்றுக்காபன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் !

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்றுக் காபன் பேனா குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்கலன் நேற்று முன்தினம் (26.10.2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம் பெற்று நாட்டை வளப்படுத்துவோம்” என பெயரிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் காபன் பேனா குழாய்கள் சுமார் 80 கிலோ கிராமாகும்.  இவை வருடமொன்றுக்கு 29,000 கிலோ கிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ஒதுக்கப்படும் அளவு இதுவரையில் கணக்கிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *