துமிந்தசில்வாவை விடுதலை செய்வதற்காக கோரிய மனுவில் கையெழுத்திட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மீது பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இது பற்றி மனோகணேசன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஏன் குறித்த மனுவில் கையெழுத்திட்டேன் என்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை மனதில் வைத்தே துமிந்தசில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டேன். துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான வலுவான அழுத்தத்தினை கொடுக்கலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பமகக கருதியே அதில் கையெழுத்திட்டேன்.
தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த நினைத்தேன். குறித்த மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
அது சுயாதீன ஆவணம் – எதிர்க்கட்சியில் உள்ள பலர் கைச்சாத்திட்டுள்ளனர். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.