“இறைமையை பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி உள்ளதால் பொம்பியோவை விட பலம் வாய்ந்தவர் வந்தால் கூட பயமில்லை”-அமைச்சர் விமல் வீரவங்ச !

“இறைமையை பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி உள்ளதால் பொம்பியோவை விட பலம் வாய்ந்தவர் வந்தால் கூட பயமில்லை” என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (29.10.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையை காட்டி சிலர் வீணான பீதியை பரப்ப முயன்றார்கள்.அவரை விட பலம்வாய்ந்த நபர் வந்தாலும் அது குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை.

நாட்டின் இறைமையை பாதுகாக்கக் கூடிய தலைமை நாட்டில் உள்ளதால் யார் வந்தாலும் எமக்கு பயம் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறானவர்கள் வந்து சென்ற போது எவரும் குரல் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் எம்.சீ.சீ பூர்வாங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த காலத்தை போல பொம்மை ஆட்சிய இன்று இல்லை. நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பத்தான் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கும். நாட்டின் இறைமை குறித்து சிந்திக்கும் தலைவர் உள்ள நிலையில் எவர் வந்தாலும் நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கைச்சாத்திடமாட்டார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *