“நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை.இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்திலுள்ளது . நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“உலக சுகாதார அமைப்பு மற்றும் தொற்றுநோயியல் பிரிவின் அளவுகோல்களின்படி, வைரஸ் இலங்கையில் சமூகமயமாக்கப்படவில்லை .
வைரஸின் சமூக மயமாக்கல் என்பது எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதேயாகும். தற்போது மினுவாங்கொட மற்றும் பேலிய கொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக காணப்படுகின்றனர்., குறித்த கொத்தணியில் முதலாவது கட்டதில் உள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை நாடு முழுமையாக மூடும் சாத்தியம் இல்லை , நாட்டை முடக்காது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிவக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.