வவுனியாவிலிருந்து நீண்ட நாட்களின் பின்னர் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் 11 உடல்கள் நேற்று வியாழக்கிழமை காலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் (ஐ.சி.ஆர்.சி.) வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
கடந்த சில தடவைகள் வவுனியா, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் உடல்கள், வன்னியில் புலிகளுடனான தொடர்புகள் சரிவர இல்லாத காரணத்தால் ஐ.சி.ஆர்.சி.யினால் எடுத்துச் செல்லப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தந்த ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் உடல்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே அடக்கம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் (22) முதல் ஐ.சி.ஆர்.சி.யினர் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதேநேரம், படையினரால் மேலும் பத்து புலிகளின் உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.