யாழ்ப்பாண பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பிரித்தானிய மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் கண்டனம் !

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரும் அதற்கான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரித்தானிய மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் மோதலில் துன்பகரமான விதத்தில் பலியானவர்களை நாங்கள் அனைவரும் நினைவில்வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது கடந்தகாலத்தின் காயங்களை ஆற்றுவதுடன் நல்லிணக்கத்திற்கு உதவும் எனவும் அமைச்சர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *