“பிசிஆர் சோதனைகளுக்காக அதிக பணத்தினை தனியார் ஆய்வுகூடங்கள் அறவிடுகின்றன” – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிற்கு செல்வதற்கு தனியார் மருத்துவமனைகள் அனுமதித்துள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் பிசிஆர்சோதனைக்கு என வருபவர்களை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த தகவல்களை சுகாதார அதிகாரிகளிற்கு அறிவிக்காமல் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஆபத்தான விதத்தில் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் பிசிஆர் சோதனைகளுக்காக அதிக பணத்தினை தனியார் ஆய்வுகூடங்கள் அறவிடுகின்றன என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *