‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு, பிரிட்டிஷ் பிலிம் அகாடமியின் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.
பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம், ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உயரியதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றது.
இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருத்துக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் உயரியதாகக் கருதப்படும் பாஃப்டா விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பிரிட்டிஷ் பிலிம் அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்து திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என மேலும் ஆறு விருதுகளையும் ‘ஸ்லம்டாம் மில்லினர்’ பெற்றுள்ளது.