வட பகுதிக்கான ரயில் சேவை வவுனியா ஓமந்தை வரை நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வவுனியா வரை நடைபெறும் யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து வந்த ரயில்வே பொறியியலாளர் குழு ஓமந்தை வரை சென்று ரயில் பாதை தொடர்பான நிலைமைகளை அவதானித்துள்ளனர். புதிதாக பாதை நிர்மாணிக்க மதிப்பீடுகளையும் மேற்கொண்டதாக வவுனியா ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வடக்கின் பெரும் பகுதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் ரயில் சேவையை விஸ்தரிப்பது தொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ரயில்வே திணைக்களத்திற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தந்த சேவை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது